Sunday, January 24, 2010

முதுகினில் தெரியும் முகம்





மணி 1:30 இருக்குமா,

இரவின் நிசப்தத்தை களைத்தவாறு என்னை இறக்கிவிட்டு அந்த பஸ் நகர்ந்தது, சேர்மன்வாடியை சற்றே தாண்டியவுடனான வளைவில் வெளிச்சத்தை தன்னோடு எடுத்து சென்று விட்டிருந்தது. கணமான பையுடன் தனிமையில் நின்றேன். கல்லூரியில் சேர்வதற்காக ‘டொனேஷன்’கட்ட கொண்டு வந்திருந்த எட்டாயிரம் ரூபாய் பையில்.


மையிருட்டு - வானமும் உறக்கத்தில், நாயின் மெல்லிய முனகல். எதிர் பக்கத்திலிருந்து வந்த கல்யாண வேன் ஒன்று தனது அழுத்தப்பட்டிருந்த ஜன மூட்டையிலிருந்து ஒருவரை துப்பிவிட்டு சுவடுகளின்றி சென்று விட்டது. அவர் என்னை போல் பயந்தவராக தெரியவில்லை மடியில் கணமில்லாமல் இருக்கலாம், மேலும் அவர் முதுகினில் முகம் தெரியவில்லை. அவரின் இருப்பை தெரிவித்த ‘சரட்’ ‘சரட்’ ஓசை பலமாய் ஒலித்தது
சற்றே இடைவெளியில் நான் எனது பாதையில் நடக்கத்துவங்கினேன்.


சட்டென எதிரே இரண்டு பளிங்கிகள் மின்னின, ‘சரட்’ சத்தம் கேட்டு கண் முழித்து பார்த்தது நேற்று குட்டிகள் ஈன்ற பூனை ஒன்று. இடப்பக்கம் உள்ள சந்தில் அவர் சென்றுவிட்டிருந்தது ‘சரட்’ சத்தம் தேயத்துவங்கியதில் இடது பக்கம் உள்ள காதுக்கு சற்று அதிகமாகவே விளங்கியது. ஆடுகளின் இரத்த வாடையையும் மீறி மொச்ச வாடை அடித்தது, ஓஹ்! செக்கடி பள்ளியை நெருங்கியாச்சி.


கல்லூரியின் இரண்டாம் வருடத்தின் துவக்கத்தில் அந்த மாத முடிவில் தன்னை தானே முடிந்து முடித்து கொண்ட நிஜாமின் நினைவு வந்தது. நான் தினமும் கல்லூரிக்கு செல்வதற்காக நடந்து வந்து புதுமனை தெருவில் இறங்குகையில் எதிரில் இருக்கும் வீட்டிலிருந்து அவனின் புன்னகை ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும், இனி எனக்கும் இல்லை அது. ஏன் அப்படி செய்து கொண்டான் இன்று வரை தெரியலை.


செக்கடி குளத்தின் வலது மேற்புறத்தின் ஓரத்தில் சுழிந்து குழாய்குள் நீர் புகுவது இரைச்சலாக கேட்டது, சென்ற வாரம் அதில் தவறி விழந்த 5 வயது சிறுவனின் தாயின் அழுகையும்.


இரவு நேரத்தில் ஞாபகத்திற்கு வரக்கூடாத விடயங்களாக வந்து சென்றன. இன்னும் நடந்துகொண்டிருக்கின்றேன். எதிரில் சிறு நெறுப்பு அணைவது போல் போய் மீண்டும் கணங்குகிறது, நானும் அதுவும் ஒன்றை ஒன்று நெருங்கிகொண்டிருந்தோம். சற்று முன்னரே எழுந்துவிட்ட பய பந்து மேலும் சுழன்றது, தைரியமெல்லாம் வரவில்லை இருப்பினும் நடந்தேன். நெருங்கிவந்த நெருப்பு அந்த நபரின் வாய் வழியாக அவரின் உயிரை உறிஞ்சி கொண்டிருந்தது. புகையுடன் என்னை பார்க்க முயற்சி செய்துவிட்டு நெருப்பு கடந்து சென்று விட்டது. தயக்கங்களுடனும் பயத்துடனும் நடை போட்டு கொண்டிருந்தேன்,


சன்னமாக கொலுசுகளின் சிரிப்பு , அதோடு மல்லிகைப்பூ வாசம் ஜன்னல் வழியாக தவழ்ந்து எனது நாசியை அடைத்தது. ஓஹ்! கப்பகாரவோ வூடு வந்தாச்சா - நேற்று தான் அந்த வீட்டு மாப்பிள்ளை வந்திருந்தார். இன்னும் இரண்டு சந்துகள் தான் வீடு நெருங்கி விடும்


“பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்...

“இந்த பாட்டு ... அட மொபைல் ..., சட்டென விழித்து எழுந்தேன்


“மாமா - சேர்மன் வாடி வந்துட்டேன்”
“சரி அங்கேயே இரு இதோ பைக் எடுத்துகிட்டு வாறேன்”


மணி பார்த்தேன் 1:27:53 ...


74 comments:

  1. முதல் புனைவு - குறைகளை எடுத்து சொல்லுங்கள் - கற்றுகொள்கிறேன்

    ReplyDelete
  2. அருமையா இருக்கு..

    //நெறுங்கிவந்த நெறுப்பு அந்த நபரின் வாய் வழியாக அவரின் உயிரை உறிஞ்சி கொண்டிருந்தது//

    சூப்பர்.. :))

    ReplyDelete
  3. நல்லாருக்கு ஜமால்...:-) கப்பகாரவோ வீடு என்றால் யார்?

    ReplyDelete
  4. வாங்க வெற்றி - தங்கள் வருகைக்கும் தருகைக்கும் நன்றி

    ---------------
    @சந்தனமுல்லை - நன்றி

    கப்பக்காரவோ வீடு - எங்கட ஊரில் ஒரு வீட்டின் மேல் கப்பல் வடிவத்தில் வாட்டர் டேங்க் இருந்திச்சி - பல வருடங்களுக்கு முன்பே அப்படி கட்டியிருந்தாங்க - அந்த வீட்டுக்கு அது தான் பேரே.

    ReplyDelete
  5. கணமான
    ,முனுகல்,ஒளித்தது,பலிங்கிகள்,இறுப்பினும்,

    முனகல் ,ஒலித்தது,இருப்பினும்,பளிங்குகள் (or )பளிங்கிகள் .

    எழுத்துப்பிழைகள் தவிர குறை எதுவும் இல்லை.இரவின் சித்தரிப்பு,

    வாழ்த்துகள் ஜமால்...
    :)

    ReplyDelete
  6. நல்லா இருக்கு ஜமால்

    ReplyDelete
  7. நன்றி கார்த்திகாவாசுதேவன் - திருத்திட்டேன்

    நன்றி ஜோதி

    ReplyDelete
  8. எனக்கு பிடிச்சிருக்குங்ணா.. நல்லாருக்கு..:)

    ReplyDelete
  9. நல்லா எழுதி இருக்கீங்க. வார்த்தை பிரயோகங்கள் அருமை. எழுத்துப் பிழைகள் கொஞ்சம் தவிர்க்கப் பாருங்கள். அருமையான நடை.

    ReplyDelete
  10. //

    அருமையா இருக்கு..

    //நெறுங்கிவந்த நெறுப்பு அந்த நபரின் வாய் வழியாக அவரின் உயிரை உறிஞ்சி கொண்டிருந்தது//

    சூப்பர்.. :))//

    ரிப்பீட்டேய்

    சூப்பர்

    ReplyDelete
  11. நன்றி அமுதா

    முயற்சிக்கிறேன்

    ReplyDelete
  12. நிறை
    =====
    நல்ல நடை.அப்படியே அழைத்துச் சென்றது போன்ற உணர்வு.முதல் முயற்சி.மிகவும் நன்று.

    தேவை
    ======
    இது போன்று நிறைய எழுத வேண்டும்.

    ReplyDelete
  13. அருமையாக விவரித்து எழுதி இருக்கீங்க. தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  14. ரொம்ப நல்லா இருக்கு அண்ணன்

    ReplyDelete
  15. நடை அருமை..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. அப்பா அந்த கும்மிருட்டில நீங்க போனது மட்டுமில்லாம எங்களையும்ல கூடவே கூட்டிட்டு போறீங்க ஜமால். அருமைப்பா!!

    ReplyDelete
  17. எங்கள் தெருவுக்கு பக்கத்தில் யானை குளம் இருக்கு, அந்தப் பக்கம் போகும்போதும் இதே மாதிரி தக் தக் தான்...

    ReplyDelete
  18. நன்றி கண்மணி

    நன்றி அரங்கப்பெருமாள்

    நன்றி சித்ரா

    நன்றி ஃபாய்ஜா காதர்

    நன்றி ராஜேஸ்வரி

    நன்றி ஷஃபி

    நன்றி டி.வீர். ஸார்

    ReplyDelete
  19. நல்லா வந்திருக்கு சகோ.

    நெருப்பு // கொஞ்சம் எழுத்துப்பிழைகள் சரி செய்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்

    இன்னும் நிறைய புனைய வாழ்த்துக்கள். ஹாஜர் அம்மா பக்கத்துலயே இருக்காங்க இல்ல, இனிமே நிறைய புனையலாம் ;)

    ReplyDelete
  20. ஐ! சூப்பரா இருக்கே..

    புதுமனைனா உடன்குடியா?

    ReplyDelete


  21. ரொம்ப நாள் முன்னாடியே எழுதியிருந்தாலும் இன்னும் அதே திரில்லோட ஃபிரெஷ்ஷா இருக்கு..!!!

    அடுத்த பாகம் எழுதும் போது நேரடியாக கதைக்கருவுக்கு வந்து விட்டால் சுவாரஸியம் கூடும்.

    தொடர்ந்து எழுதுஙக்ள்..!!! வெற்றி நிசசயம்.

    ReplyDelete
  22. நல்லா இருக்கு அண்ணே....புது டெம்ப்ளேட்:)

    ReplyDelete
  23. ஹ்ம்ம். ரொம்ப நல்லா இருக்கு மாப்ள. நான் ஊருக்கு போறதுக்கு முன்னாடி ஊரைக் கண்ணுல கொண்டு வந்திட்ட (இருட்டா இருந்ததால கொஞ்சம் சரியாத் தெரியலைதான்).

    ReplyDelete
  24. பின் நவீனத்துவம் மாதிரி இருகுங்க..

    நல்லா சொல்லியிருக்கீக...

    ReplyDelete
  25. நிறைய தடவை தனிமையில் நடு ராத்திரி வந்த அனுபவம், சேர்மன்வாடிலேர்ந்து வீட்டுக்கு.. எதன்மீதும் நம்பிக்கையில்லாவிடினும் பயம் என்ற ஒன்று இருந்துக்கொண்டேயிருக்கும்

    அந்த கடந்தகால சம்பவங்களை இப்போது நிகழ்காலத்தில் கண்முன்னே கொண்டுவந்திருக்கே...

    நல்லாயிருக்கு மச்சான்... இன்னும் பயத்தின் உச்சத்தை சொல்லிருந்தால் நல்லாயிருந்திருக்குமோ...

    ReplyDelete
  26. //இராகவன் நைஜிரியா said...
    பின் நவீனத்துவம் மாதிரி இருகுங்க..
    //

    இப்படியே சொல்றீங்களே பின் நவீனத்துவம் என்றால் என்னாண்ணே, ஒரு பதிவாவது போட முடியுமா

    ReplyDelete
  27. அடுத்த பகுதி எப்போ ?
    :)

    ReplyDelete
  28. நல்லாக இருக்கு ஜமால். அந்த இருட்டில் கூடவே நடந்த உணர்வு.

    ReplyDelete
  29. //அவர் முதுகினில் முகம் தெரியவில்லை.//
    //தன்னை தானே முடிந்து முடித்து கொண்ட//
    //பய பந்து மேலும் சுழன்றது//
    //நெருப்பு அந்த நபரின் வாய் வழியாக அவரின் உயிரை உறிஞ்சி கொண்டிருந்தது//
    வார்த்தைகள் இலாவகமாய் விழுவது அழகு சேர்க்கின்றது.

    //பூவில் வண்டு மூடும் கண்டு மூடும் கண்கள் மூடும் ... //
    கையில்தானே மொபைல் இருக்கு. சரியாகக் கேட்டிருக்கலாமே.
    தூக்க கலக்கமோ?
    பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்.

    எழுத்துப் பிழைகளை சரி செய்தால் இன்னும் அழகாகும்.
    குறிப்பாக பயப்பந்து, பளிங்குகள்

    கலக்குங்க ஜமால்

    ReplyDelete
  30. ரசனையான இடுகை... ரசிக்கும்படி இருந்தது. வர்ணனைகள் அபாரம்...

    ReplyDelete
  31. நல்லா வந்திருக்கு ஜமால் மக்கா.முதல் புனைவு மாதிரியே தெரியவில்லை.நல்ல ஸ்லாங்.

    தொடர்ந்து எழுதுங்கள். practice makes perfect.

    ஊரில் இருக்கீங்களா இப்போ?

    ReplyDelete
  32. நல்லா இருக்கு. முக்கியமா எனக்குப் புரியுது.

    ஆனா இந்த செய்யதுகூட சேந்துடாதீங்க.

    ReplyDelete
  33. ஜமால்,கலக்கிட்டீங்க.மனசையும்.
    போனவாரம் துபாய் ராஜா பயமுறுத்தியிருந்தார்.அப்பிடித்தான் என்னமோன்னு பயந்து பயந்தே படிச்சு முடிச்சேன்.ஒண்ணும் ஆகல.
    நல்லாருக்கு ஜமால்.

    ReplyDelete
  34. ஜமால்! நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  35. அண்ணா ஒரு கிராமத்த்துக்கு அவுட்டர் பஸ்ஸ்டாப்ல இறங்கி போகும்போது நிறைய இதே போல நானும் பயந்தே நடந்திருக்கேன் என்னா பகல்லயே ஏகப்பட்ட பேய் பாத்திட்டோம் ராத்திரிபேய்தானே இது ஒண்ணும் செய்யாதுன்னு நினைச்சுக்குவேன்...கண்டிப்பா இது எல்லாருக்கும் தோணுற பயம்தான்...!

    ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு உங்க எழுத்தை பார்க்க அடிக்கடி நிறைய எழுதுங்கண்ணா...!

    ReplyDelete
  36. நல்லாருக்கு ஜமால். பாராட்டுகள்.:)

    ReplyDelete
  37. இருளை நேரில் கொண்டு வந்தது தங்களின் வர்ணிப்பு.

    ReplyDelete
  38. அருமையா இருக்கு சகோ..

    ReplyDelete
  39. ஜமால் கலக்கிட்டீங்க::))

    இந்த ஒரு கதையிலயே ஒரு 5,6 கதைகளுக்கான கரு இருக்கு..:))

    மொத்த சரக்கையும் குறுக்கி ரெண்டு மூணு லைன்ல தர பார்ட்டின்னு நெனச்சேன்.. ஸூப்பர்.:)

    ReplyDelete
  40. நல்லாருக்கு. வாழ்த்துகள்

    ReplyDelete
  41. புனைவா? சூப்பர்... சரி சரி... விரைவில் (உங்க) புத்தக வெளியீட்டு விழாவில் சந்திக்கிறேன்

    ReplyDelete
  42. கதை தொடர்கதையா,

    இருட்டின் பயம் எழுத்தில் புரியுது. ஆனா முடிவு இல்லை.

    //சன்னமாக கொலுசுகளின் சிரிப்பு , அதோடு மல்லிகைப்பூ வாசம் ஜன்னல் வழியாக தவழ்ந்து எனது நாசியை அடைத்தது. ஓஹ்! கப்பகாரவோ வூடு வந்தாச்சா - நேற்று தான் அந்த வீட்டு மாப்பிள்ளை வந்திருந்தார். இன்னும் இரண்டு சந்துகள் தான் வீடு நெருங்கி விடும்//

    நல்லாயிருக்கு ஜமால் எழுத்து நடை.

    ReplyDelete
  43. கலக்கலா இருக்கு

    ReplyDelete
  44. முதல் இரண்டு பத்திகளின் வர்ணனைகள் மிகவும் புதியது. மிக அழகான வர்ணனைகள்.

    முடிவு சற்றும் எதிர்பாராமல். மணி பார்த்ததுடன் நிறுத்தியது இன்னும் அழகு. சூப்பர்.

    ReplyDelete
  45. கதை ரொம்ப சுவாரஸியமா இருக்கு ..

    அருமை ஜமால் .

    ReplyDelete
  46. பயமின்றி பதிவு செய்துள்ளீர்கள்.வணக்கம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  47. படிக்க படிக்க பயப் பந்து உருள ஆரம்பிச்சிருச்சி.. நல்லா இயற்கையா இருக்கு அண்ணா:-)))

    ReplyDelete
  48. நன்றி அமித்து அம்மா - எழுத்துப்பிழைகள் என்னிடம் தப்பி வந்துவிடுகின்றது :(

    நன்றி நாஸியா - புதுமனத்தெரு - இது எங்கள் ஊரின் ஒரு தெருப்பெயர்

    நன்றி அ.மு.செய்யது - அடுத்த பாகமா - என்னா டெரர் கிளப்புறீக

    நன்றி நிஜமா நல்லவரே - ஆமாம் உங்க புது டெம்ப்ளேட் கமெண்ட்

    நன்றி நவாஸு - கிளம்பு கிளம்பு

    நன்றி இராகவன் அண்னா - என்னா பி.நவீயா - அப்படின்னா

    நன்றி அபுஅஃப்ஸர் - இன்னுமாஆஆஆஆஆ

    நன்றி கோவி அண்ணா - ஏன் ஏன்

    நன்றி ஜெஸ்வந்தி - பயத்தோடு தானே

    நன்றி சுல்தான் அண்ணா - எழுத்து பிழைகள் தான் பாவம் ரொம்ப படுத்துறேன் அதுகளை

    நன்றி பாலாசி தங்கள் வருகைக்கும் தருகைக்கும்.

    நன்றி மக்கா(பா.ரா) - ஊர்ல இல்லை - நவாஸிடம் அப்டேட்டிக்கோங்கோ

    நன்றி ஹூஸைனம்மா - புரியுதா ஹா ஹா

    நன்றி ஹேமா - பயம் பயம் :)

    நன்றி ஷாகுல்.

    நன்றி வசந்த் - அதே தான் - சும்மா நான் எப்போதும் ஊரில் இறங்கும் பேரூந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்ததேன்(கற்பனையில்)

    நன்றி வானம்பாடிகள் பாராட்டுகளுக்கு.

    நன்றி ராஜசூர்யன் தங்கள் வருகைக்கும் தருகைக்கும்.

    நன்றி சகோ மிஸர்ஸஸ்.மேனகாசாத்தியா

    நன்றி பலா பட்டறை - நிறைய கரு இருக்கா - இரகசியமா சொல்லுங்க - ட்ரை செய்யறேன்.

    நன்றி ஆடுமாடு வாழ்த்துகளுக்கு.

    நன்றி அரசூரான் - ஏன் மாம்ஸு

    நன்றி அக்பர் - கதையுமல்ல தொடருமல்ல.

    நன்றி நசரேயன்.

    நன்றி பின்னோக்கி இரசித்து சொன்னமைக்கு.

    நன்றி ஸ்டார்ஜன்.

    நன்றி இரவீ இரவீ

    நன்றி தாராபுரத்தான் - பயத்தோடுதாங்க(கருத்துகள் பற்றிய)

    நன்றி இயற்கை - இயற்கையாக - ஹா ஹா

    ReplyDelete
  49. ஜமால்காக்கா.
    அப்படியே நான் சேர்மன்வாடி இறங்கி என் தெருக்கு போகும்வழியில் நடந்ததுபோன்ற ஓர் உணர்வை ஏற்படுத்திட்டீங்க சூப்பர்..

    ReplyDelete
  50. நல்லா கெளப்புறீங்க பீதிய

    ReplyDelete
  51. நல்ல வேளை.. இந்த பதிவ நான் பகலில் படிக்கிறேன்... :) :)

    நல்லா இருக்கு அண்ணா.. :) :)

    ReplyDelete
  52. நன்றி தங்கச்சி அன்புடன் மலிக்கா

    நன்றி அண்ணா அண்ணாமலையான்

    நன்றி தம்பி கனகு

    ReplyDelete
  53. ஜமால் கலக்கிட்டீங்க

    ஆனால் சிலவார்த்தைகள் புரியவில்லை தம்ஸ்

    ReplyDelete
  54. புனைவு எதார்த்தமா இருந்தது கடைசியில் டிவிஸ்ட்.... உண்மை சம்பவத்தை சந்திப்பது போன்ற உணர்வை வரவைக்கிறது கதையின் அமைப்பு..... நல்லாயிருக்குங்க....

    ReplyDelete
  55. //நெருங்கிவந்த நெருப்பு அந்த நபரின் வாய் வழியாக அவரின் உயிரை உறிஞ்சி கொண்டிருந்தது.//

    அதெப்படி மாப்ள,
    எதைச்சொல்ல வந்தாலும் சமூகத்தின் மீதான உனது பார்வை பளிச்சிட்டுவிட்டு போகிறது?

    ReplyDelete
  56. visit this blog http://islaamkooruvathu.blogspot.com/

    ReplyDelete
  57. நல்லாருக்குங்க ஜமால்.. ஜமாய்ங்க!!!

    ReplyDelete
  58. நேரம்கிடைக்கும்போதுவந்து பாருங்கள்

    http://fmalikka.blogspot.com/

    ReplyDelete
  59. அப்படியே மையிருட்டில் நடந்து போனது , நெருங்கி வந்த நெருப்பு , சரட் சரட் சத்தம் , கப்ப கார வீடு , எல்லாம் உண்மை கதை ஆகையால் சுவரஸ்யம் ஜாஸ்தியா வே இருக்கு.

    அப்படியே மை இருட்டில் என்னை இறக்கி விட்டால் எப்படி இருக்கும் ஒரு கற்பனை பே பே பே....

    ReplyDelete
  60. ஆஹா ரொம்ப அழகு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  61. சூழ்நிலையின் வர்ணனை அபாரம்.

    அருமையா எழுதி இருக்கீங்க
    நான்தான் சற்றே தாமதம் :)

    அப்புறம் புது டெம்ப்ளேட் அருமை!

    ReplyDelete
  62. ரெண்டாம் பாகம் விரைவில் எதிர் பார்க்கிறேன்!

    ReplyDelete
  63. நல்லா இருக்கு அண்ணா:)

    ReplyDelete
  64. ரொம்ப நல்லா இருக்கு ஜமால்.

    ReplyDelete
  65. "எதிர் பக்கத்திலிருந்து வந்த கல்யாண வேன் ஒன்று தனது அழுத்தப்பட்டிருந்த ஜன மூட்டையிலிருந்து ஒருவரை துப்பிவிட்டு சுவடுகளின்றி சென்று விட்டது."


    "செக்கடி குளத்தின் வலது மேற்புறத்தின் ஓரத்தில் சுழிந்து குழாய்குள் நீர் புகுவது இரைச்சலாக கேட்டது, சென்ற வாரம் அதில் தவறி விழந்த 5 வயது சிறுவனின் தாயின் அழுகையும்."


    "புகையுடன் என்னை பார்க்க முயற்சி செய்துவிட்டு நெருப்பு கடந்து சென்று விட்டது."


    கற்பனையோடு யதார்த்ததை எழுதுவது என்னும் மந்திரத்தை கற்ற ....மந்திரவாதி நீங்கள்

    ReplyDelete
  66. ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா..

    முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  67. சொல்ல வேண்டிய எல்லாத்தையும் எல்லாரும் சொல்லிடாங்க..... இருந்தும் நாம எதாதும் சொல்லியே ஆகணும்.... முதல் படைப்புன்னு சொல்றத நம்பவே முடில.... பல பேப்பர்கள் குப்பைக்கு போன பின், இது பிறந்திருக்க வேணும்னு நெனக்றேன்.... ஆயினும்.... நீங்க ஒரு நல்ல கதாசிரியர்.... படிக்ரவங்க்ளலாம் கூடவே பயணிக்க வைக்கிறது ரொம்ப கஷ்ட்டம் அத சுலபமா செஞ்சுபுட்டீங்க.... பயணங்கள் தொடரட்டும் தோழரே....

    ReplyDelete
  68. நல்லா இருக்குங்க..., அருமையான நடை..,

    ReplyDelete
  69. அருமையாக கதை எழுத வருகிறது உங்களுக்கு. நிறைய எழுதுங்கள். சுஜாதாவிற்கு பிறகு எழுத வந்தவர்களில் அவரின் பாதிப்பு இல்லாதவர்களே இருக்க மாட்டார்களோ என நினைக்க தோணுகிறது. அன்பு சுஜாதா நீங்கள் மறையவில்லை. எங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.

    ReplyDelete