Thursday, June 9, 2016

நீ


என் எழுத்துகளை
எனக்கே அறிமுகம் செய்தவள் நீ
.
காணல் காட்டில்
நீருற்றாய் வந்தவள் 
நீ
.
உறைந்து கிடந்த
உவப்பற்றவைகளுக்கு உயிரூட்டி
உட் கொண்டவள் நீ
.
செரிக்கும் முன்
அத்தனையையும் மரிக்க செய்தவள் நீ
.
சுமைகளை
குறைத்து என்னை இறகாக்கியவள் நீ
.
தாயாய் 
முந்தானை தந்தவள் நீ
.
தந்தையாய்
கற்று தந்தவள் நீ
.
சகோதரணாய், சகோதரியாய்
பாதுக்காத்தவள் நீ
.
தோழனாய், தோழியாய்
அன்பை தந்தவள் நீ
.
எல்லாமுமாய் தான் இருக்கிறாய்
.
கடந்து
விட்ட குழந்தை தன்மையை 
மீட்டி கொண்டவள் நீ
.
எனக்குமே காட்டி தந்தவள் நீ
.
இன்னும் 
எத்தனையோ இருக்கு சொல்ல
வார்த்தைகள் கோர்த்துகொள்ளும் மெல்ல ...

.
#கிறுக்கல்கள்
---------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment