Wednesday, December 23, 2009
வேட்டைக்காரன்
சி. கருணாகரசு said...
கையில வச்சிருக்கன் வில்லு....
என்னோட மோத எவனுக்கு இருக்கு தில்லு!!
இந்த வேட்டைக்காரனின் கதை இங்கே பாருங்கள்
Monday, December 21, 2009
Large Import
நிறைய இடுக்கைகள் மற்றும் மறுமொழிகள் உள்ள வலைப்பூவினை export & importல பிரச்சனைகள் இருக்கின்றன
அதற்கான ஒரு தீர்வாக இந்த பதிவு - நான் இன்னும் முயற்சிக்கவில்லை.
உங்கள் கருத்துகளை இங்கே சொல்லவும்.
------------------------------------------------------
மனிதன் தோண்றி சுமார் இரண்டு மில்லியன் ஆண்டுகளாக அவனது பிராதான உணவு வேட்டையாடி புசித்த மாமிசமும் பழங்கள் போன்ற தாவர உணவும் தான். இத்தகைய உணவை ஏற்றுக்கொள்ளும்படிதான் அவனது மரபணுக்களும் ஜீரண மண்டலமும் பரிணாமத்தால் பக்குவப்பட்டிருக்கிறது. மனித வரலாற்றில் மிக சமீப காலத்தில் தான் விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது சுமார் ஆறாயிரம் வருடங்களாகத்தான் மனிதன் பெருமளவு அரிசி கோதுமை சர்ககரை போன்ற மாவு சத்துப் பொருட்களை உற்பத்தி செய்து உண்ணப் பழகியிருக்கிறான்.
கருத்திடுங்கள் இங்கே
Friday, December 18, 2009
ஏணிப்படிகள்
குறிப்புகள் :
௧டந்த மார்ச் 2009 நடந்த பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். மதிப்பெண் குறித்த அட்டவணை இணைத்துள்ள அறிவிப்பில் காணலாம்.
அறிவியல், வரலாறு, வணிகவியல், வொகேஷனல் என்று அனைத்து பிரிவில் இருந்தும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் சென்று சேரவேண்டிய கடைசி தேதி : 24 . 12 . 2009
விபரங்கள் கீழே
உடன் இதற்கான விண்ணபங்களை கீழ்க்கண்ட தமிழ்நாடு அரசு இணையத்தளத்திலிருந்து தரவிறக்கிக்கொள்ளலாம்
http://www.tn.gov.in/dge
முக்கியகுறிப்பு: இந்தப்பதிவினை படிப்பவர்கள் முடிந்தமட்டிலும் தேவைப்படுவோரிடம் பகிருங்கள்.
-------------------------------------------------------
CENTRAL SECTOR SCHEME OF SCHOLARSHIP FOR COLLEGE AND UNIVERSITY STUDENTS 2009
Sunday, December 13, 2009
Tuesday, December 8, 2009
நான் என்னை அறிந்தால்
ஆன்மீகத்தின் நுழைவாயிலில் என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.அந்த கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. எத்தனையோ நூல்களை படித்தும் என்னிடம் பதில் இல்லாமல் போனது எப்படி? ஏட்டு கல்வியில் கிடைக்காத பதில்கள் ஞானக்கல்வியில் கிடைக்கிறது.
ஞானிகள் அதிகம் யோசிக்கக் கூடியவர்கள். ஒரு கருத்தை கூறினால் அதில் பலவிதமான பொருள்கள் இருக்கும். பல ஞானக்கதைகளை வாசிக்கும் போது அது நமக்கு வெளிச்சப் படுத்துகிறது.
ஆன்மீகம் என்பது ஆன்மாவைப்பற்றிய விளக்கம் அந்த விளக்கம் தான் ஞானம்.விஞ்ஞானிகள் எதையும் ஆராய்ந்து கூறும் போது உலகம் உடனே ஏற்றுக் கொள்ளும். ஆனால் மெய்ஞ்ஞானி ஒன்றை கூறினால் இந்த உலகம் யோசிக்கும். காரணம் அறியாமை ,விளங்காமை.
ஞானம் வெளியிலிருந்து தொடங்கப்படுவதல்ல.தன்னிடமிருந்து ஆரம்பிக்கப் படுவது. சுய சிந்தனையை தன்னில் ஏற்படுத்தக் கூடியது. ஞானம் கற்பதில் என்ன பயன் இருக்கிறது? என்ற சிந்தனை அதனுள் நுழையுமுன் என்னிடம் எழுந்தது.
ஒரு மருத்துவரிடம் நீங்கள் மருத்துவரானதால் உங்களுக்கு என்ன பயன்? என்று கேட்பதைபோல் தான் ஞானமும் என்று விளங்கப்படும் போது உணரப்பட்டேன்.
இந்த உலகில் எத்தனையோ விதமான அறிவுகள் படித்துக் கொடுக்கப்படுகின்றன அவைகளெல்லாம் பொருளீட்டலை மையமாக வைத்தே போதிக்கப்படுகிறது. ஆனால் மனிதனைப் பற்றி படித்துக் கொடுக்கப்படுவது தான் ஆன்மீகஞானம்.
மீதம் இங்கே
Wednesday, November 4, 2009
அழகாய் கோபப்படுகிறாய் அளவாய் கோபப்படு
நான் ரொம்ப கோபப்பட்றேனா?
என் கோபம் தவறா?
ஏன் எனக்கு இவ்வளவு கோபம் வருகிறது?
இப்பல்லாம் அடிக்கடி சீரியஸ் ஆகீரேனா.
இப்படியெல்லாம் என்னிடம் பற்பல முறை கேட்கிறாய்.
கோபம் கொள்வது தவறேயல்ல.
கோபம் என்பது ஒரு சக்தி.
ஒறு புழுவை சிறு குச்சியால் குத்தினால் அது நெளிந்து தன் எதிர்ப்பை காட்டும்.
வழிகள் அடைக்கபெற்ற பூனை கூட தாக்குதல் நடத்தும்.
செடி கொடிகளுக்குக்கூட உணர்ச்சி உண்டு.
நாம் மனிதர்கள். நம் முன்னே நடக்கும் அக்கிரமம் பார்த்து உக்கிரம் கொள்வது தவறே அல்ல.
சமுதாயத்திற்கு நல்ல செய்திகள் கொண்டு செல்லகூடிய வலிமை பெற்ற ஊடக்த்தை தன் அகத்தே கொண்டிருக்கும் சினிமா துறையில்(எல்லோரும் அல்ல) சமூகத்திற்கு நலம் சொல்லா விட்டாலும் பரவாயில்லை, பொழுதை போக்க (இப்படியே பொழுதை போக்கி கொண்டிருந்தால் எப்பொழுது வல்லரசு ஆவது) ஒரு படம் எடுத்தாலும் பரவாயில்லை.
செய்தி சொல்கிறேன் பேர்வழியென்று தனக்கு தோன்றும் (எதை வேண்டுமானலும்) ஒன்றை படம் என்று எடுத்து, கொஞ்சம் கூட பொதுநலச்சிந்தனை இல்லாமல், மனதுக்கும் சமுதாயத்திற்கும் கேடு விளைவிக்கக்கூடிய வெறும் வாய்வழிக்கூட சொல்ல லாயக்கற்ற ஒரு செய்தியை படமாக எடுத்து, மக்களின் பணத்தையும் நேரத்தையும் வீணடித்து ...
இவ்வாறாக கோபப்பட்டு கொண்டிருந்தாய். அந்த .... (சென்சார்) பயலை(இயக்குனரை) நார் நாராய் கிழிக்க வேண்டும் என்று சொன்னாய்.
பெண்னியத்தை கேவலப்படுத்திய அவனை நிக்க வச்சி சுட வேண்டும் என்று புலம்பினாய்.
இதையெல்லாம் செய்ய முடியவில்லையே என்று ஆற்றாமை தாலாமல் அழுது தீர்த்தாய்.
செல்லச்சினுங்களாய் பட்டது உன் அழுகை
அவனை ஏதாவது செய்யேண்டா என்று உரிமையோடு முறையிட்டாய்.
அடுத்த நாள் அந்த இயக்குனருக்கு கொலை மிரட்டல் என்ற செய்தி வலையில் படித்து உனை அழைத்து சொன்னேன் மிகவும் சந்தோஷமடைந்தாய்.
இப்படியாக சமுதாய்ச்சீர்கேடு எங்கு நடந்தாலும் எவ்வாறு நடந்தாலும், நீ கோபம் கொள்கிறாய். இந்த கோபம் சரிதானா என்று என்னிடம் அடிக்கடி கேட்டுக்கொள்கிறாய்.
உனக்கு நான் சொல்லவதெல்லாம் இதுதான்
கோபம் என்பது ஒரு சக்தி, கோபம் என்பது ஒரு உணர்ச்சி.
உணர்ச்சி அற்ற ஜடமாக உன்னை இருக்க சொல்லவில்லை.
சக்தி என்பது எரிபொருள் போன்றது, அதை ஆக்கத்திற்கு பயன்படுத்துவதும் அழிவுக்கு பயன்படுத்துவதும் உன் கையில் தான் உள்ளது.
பல சமயங்களில் உணர்ச்சிகளை உடன் வெளி காட்டாமல் இருப்பதுதான் உனக்கும் உன்னைச்சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது.
கடைசியாக உனக்கு நான் சொல்வது
அழகாய் கோபப்படுகிறாய் அளவாய் கோபப்படு
Monday, October 5, 2009
ஏணிப்படிகள்
இளநிலைப்பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு மற்றும் உதவித்தொகை அறிவிப்பு பகிர்வு
உதவித்தொகை அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி, 150 இளநிலைப் பட்டதாரிகளுக்கான தனது உதவித்தொகையினைப் பற்றிய அறிவிப்பினை கீழ்க்கண்ட இணையதளத்தினில் வெளியிட்டள்ளது.
Website: www.rbi.org.in/youngscholars.aspx
ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி: 21.10.2009
Selection test for the RBI young scholars’ award will be held on January 10,2010.
இளநிலை பட்டதாரிகள் எந்த துறையில் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு 18 முதல் 23 .
இது 5 அக்டோபர் தேதி இட்ட ஹிந்து நாளிதழிலும் வெளிவந்தது உள்ளது.
நன்றி : தி hindu .
வேலைவாய்ப்பு:
2008 - 2009ல் பி.ஈ, பி.டெக், எம்.சி.ஏ, எம்.எஸ்ஸி படித்த பட்டதாரிகளுக்கு ஃபோர்டு நிறுவனம் தனது வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது.
www.india.ford.com/careers
மேலதிக தகவலுக்கு கீழே இருக்கும் படத்தினை கிளிக்கி பெரிதாக்கி விபரம் அறிந்துகொள்ளவும்.
Friday, September 18, 2009
ஏணிப்படிகள்
1. Fair and Lovely Foundation
தகுதி :
a. பெண்களுக்கு மட்டுமே
b. +2 முடித்து மேற்படிப்பு படிக்க
c. ஆங்கில திறமை இருக்க வேண்டும்.
கடைசி தேதி :
30 செப்டம்பர் 2009
மேலும் விவரங்களுக்கு இந்த சுட்டியை சொடுக்கவும்.
என்னை பொறுத்தவரை இது மிகவும் நல்ல ஒரு வழி. இவர்களே படிப்பு முடியும் வரை உதவி செய்கிறார்கள்.
வருடத்திற்கு ஒரு லட்சம் வரை உதவித்தொகை தருகிறார்கள்.
உங்களுக்கு தெரிந்த பெண் குழந்தைகள், கல்விக்கு உதவி தேவை படின் தெரியப்படுத்தவும்.
2.IndianOil Academic Scholarships
தகுதி :
10 முடித்து +2 படிப்பதில் இருந்து, இன்ஜினியரிங், மருத்துவம், MBA அனைத்து படிப்பிற்கும் வழங்குகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த சுட்டியை சொடுக்கவும்
கடைசி நாள் :
30 செப்டம்பர் 2009
இன்ஜினீயரிங், மருத்துவம், MBA போன்ற படிப்பிற்கு மாதம் 2000 ரூபாயும், +௨ படிக்க மாதம் 1500 ரூபாயும் வழங்குகிறார்கள்.
முடிந்தவரை நண்பர்களுடன் பகிருங்கள்.
அன்புடன்
எஸ். கே.
Tuesday, September 1, 2009
என்னை பற்றி சில ...
The Rules:1. Link the person who tagged you.
2. Post the rules on your blog.
3. Share the ABCs of you.
4. Tag 4 people at the end of your post by linking to their blogs.
5. Let the 4 tagged people know that they have been tagged by leaving a comment on
their website.
6. Do not tag the same person repeatedly but try to tag different people, so that there
is a big network of bloggers doing this tag.
The Tag:
1. A – Available/Single? No
2. B – Best friend? : myself
3. C – Cake or Pie?: Cake
4. D – Drink of choice? : fresh juice
5. E – Essential item you use every day? :Laptop
6. F – Favorite color? : Blue
7. G – Gummy Bears Or Worms?: --------
8. H – Hometown? - Adirampattinam
9. J – January or February? whatz up
10. K – Kids & their names? Haajar (Girl Baby)
11. L – Life is incomplete without? – Iman(Faith in Creator), Taqwa (Fear on HIM)
12. M – Marriage date? 26 March
13. N – Number of siblings? 3brothers & 2sisters
14. O – Oranges or Apples? both
15. P – Phobias/Fears? anuptaphobia
16. Q – Quote for today? : Friendship is a not a word, but a sentence
17. R – Reason to smile? : can’t count
18. S – Season? spring
19. T – Tag 4 People? கணினி தேசம், மனவிழி, வாசகன், அன்புடன் நான்
20. U – Unknown fact about me? it will be always unknown
21. V – Vegetable you don't like? brinjal
22. W – Worst habit? putting nose into others job
23. X – X-rays you've had? Kidney Stone.
24. Y – Your favorite food? Dhall, Coconut Rice, Pappad
- அன்புக்குரியவர்கள்: அனைவருமே.
- ஆசைக்குரியவர்: துணைவி
- இலவசமாய் கிடைப்பது: நட்புடன் அன்பு
- ஈதலில் சிறந்தது: வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் கொடுப்பது.
- உலகத்தில் பயப்படுவது: தனிமை
- ஊமை கண்ட கனவு: பே பே பே
- எப்போதும் உடனிருப்பது:ஞாபகங்கள் பற்றிய மறதி
- ஏன் இந்த பதிவு: சுமஜ்லா அழைத்ததால்...
- ஐஸ்வர்யத்தில் சிறந்தது: பிள்ளை செல்வம்.
- ஒரு ரகசியம்: ரகசிமாய் …
- ஓசையில் பிடித்தது:ஹாஜர் தற்பொழுது சொல்லும் ‘அல்லாஹ் – அல்லாஹ்’
- ஔவை மொழி ஒன்று: அறம் செய விரும்பு.
- (அ)ஃறிணையில் பிடித்தது: என்னை பிடித்த(து) கணினி.
Thursday, August 27, 2009
செந்தில்நாதன் அறுவை சிகிச்சை வெற்றி
இன்று (27 ஆகஸ்ட் 2009) சிங்கப்பூர் நேரம் காலை 8 மணிக்குத் தொடங்கிய VAD Fixing அறுவை சிகிச்சை மாலை 3:30க்கு வெற்றிகரமாக முடிவடைந்து செந்தில் இப்பொழுது நலமாக உள்ளார். செந்தில்நாதன் நலமுற பிரார்த்தித்த, உதவிய, உதவிக்கொண்டிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.
வல்ல இறைவா உனக்கு யமது நன்றிகள்.
Monday, August 24, 2009
நண்பர் சிங்கைநாதனுக்காக பிரார்த்திப்போம்
நண்பர் சிங்கைநாதனுக்கு ஏழு மணி நேரங்கள் கொண்ட அறுவை சிகிச்சை வருகின்ற 27ஆம் தேதி காலை எட்டு மணியளவில் (சிங்கை நேரம்) நடைபெற உள்ளது.
எல்லோருமாக அவருக்காக பிரார்த்திப்போம்.
முடிந்த அளவு இவ்விடயத்தை உங்கள் வலையின் மூலம் உங்கள் நட்புகளுக்கு கொண்டு செல்லுங்கள்.
அன்புடனும் நட்புடனும் …
“And, Now…”
என் கிட்டே கை இருக்கு கவுனில்லே
என் கிட்டே பைக் இருக்கு எம்80 இல்லே
என் கிட்டே ஸ்ட்ராப் இருக்கு பைனாக்குலர் இல்லே
என் கிட்டே செயின் இருக்கு சைக்கிள் இல்லே
இங்கே மக்கள் தொலைத்துவிட்ட
பிகரும் இங்கே தான் இருக்கு
Wednesday, August 19, 2009
நீயில்லாமல் நான் நீரில்லாத மீன்
புரியாத பிரியம்
பிரியும்போது புரியும்.
நீயில்லாமல் நான்
நீரில்லாத மீன்.
உன்னை பற்றி எழுதும் போதெல்லாம்
நீ இதை படித்து உன்னை பற்றிதான் நான் எழுதுகிறேன் என்பதை புரிந்து கொண்டதாய் நான் நினைத்துக்கொள்வேன்.
உன் குரல் கேட்க்காத என் தொலைபேசிகள் தொல்லைபேசிகள் ஆயின.
ஒரு குறுந்தகவலாவது அனுப்பிவிடு – பாவம் என் தொலைபேசிகள்
நீ விரும்பி கேட்கும் பாடல்களை கேட்கும் பொழுது,
நீயும் கேட்டுக்கொண்டிருப்பதாய் நினைத்து புன்னகைத்துக்கொள்வேன்
என் அருகே இருந்து துடிக்கும் உன் இதயம்,
அந்த சத்ததையே தாலாட்டாய் கேட்டு உறங்கி விடுவேன்
எங்கே போனாய் என்னால் தூங்கவும் முடியவில்லை,
நீ என் அருகில் இல்லை என்பதை தாங்கவும் முடியவில்லை.
உன் இதயத்தை தான் எடுத்து சென்றுவிட்டாய்,
என் இதயத்தையாவது விட்டுச் செல்லக்கூடாதா.
என்னால் சுவாசிக்கவும் முடியவில்லையே.
நீரில்லாத மீனால் சுவாசிக்க இயலாது என்று உனக்கும் தெரியும்தானே